Thursday 9 October 2014

திருச்சி


BSNL ஊழியர் சங்கத்தின் 7ஆவது தமிழ் மாநில மாநாடு

BSNL ஊழியர் சங்கத்தின் 7ஆவது தமிழ் மாநில மாநாடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள நியூ டைமண்ட் மஹாலில் 2014, அக்டோபர் 11 முதல் 13 வரை சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. அக்டோபர் 11ஆம் தேதி காலை சரியாக பத்து மணிக்கு பொது அரங்க நிகழ்ச்சிகள் துவங்க உள்ளது. பொது அரங்க நிகழ்ச்சிகளுக்கு அனைத்து தோழர்களையும்வருக வருக என தஞ்சை மாவட்டசங்கம் அன்புடன் வரவேற்கிறது. நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு, பாராளுமன்ற உறுப்பினர் தோழர் T.K.ரங்கராஜன், தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் தோழர் P.சம்பத், தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் திரு G.V.ரெட்டி ITS மற்றும் மாநில செயலாளர் தோழர் S.செல்லப்பா ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர். எனவே அனைவரும் தவறாது கலந்துக் கொள்ள வேண்டும்.  



தோழமையுடன் தஞ்சை மாவட்ட சங்கம் BSNLEU 

No comments:

Post a Comment