Friday 27 December 2013

சுனாமி: கற்றதும், பெற்றதும்

இதயத்தின் ஆழத்தில் பதிந்த சோகதினம் டிசம்பர்-26


இந்த மலர்களுக்குஅனைவராலும் ஏற்றப்பட்ட கடற்கரை தீபம் ஒளி
















பிஞ்சு குழந்தையின் தவிப்பு முகம்

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பூகம்பத்தால் உண்டான சுனாமி, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. சுனாமியின் மூலம் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம் என்ன, பெற்றிருக்கும் விஷயங்கள் என்ன?

ஐக்கிய நாடுகளின் உலக பேரி டர் தடுப்பு மையம், சுனாமியை எதிர்கொள்வதற்கான 10 அம்ச திட்டங்களை அறிவுறுத்தியிருக் கின்றது. அவை வருமாறு:

12 நாடுகளை நேரடியாக தாக்கியது. 39 நாடுகளைச் சேர்ந்த எண்ணற்ற மக்களும் சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். இயற்கைப் பேரிடர் உலகின் எந்தப் பகுதியில் நிகழ்ந்தாலும் அதன் விளைவுகள், கண்டங்களைத் தாண்டி பரவக்கூடியதாக இருக்கின் றன.

கடலோரப் பகுதிகளை பாதுகாப் பதில் இன்னமும் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது. 300 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் பாதிப் பேர் கடலோரப் பகுதிகளில்தான் வாழ்கின்றனர். அரசு இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகிறதோ அந்த அளவுக்கு உயிர்ச்சேதம் குறையும்.

தாய்லாந்தில் கடல் திடீரென்று உள்வாங்கியதைப் பார்த்த, பழங்குடி இனத்தின் தலைவர், அவரது இனமக்களை மலையின் உச்சிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக் கிறார். இதனால் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 1800 பேர் உயிர் பிழைத்தனர். இதேபோல் இன்னொரு சம்பவமும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தி லிருந்து 100 சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். இவர்களில் பத்து வயதுச் சிறுமியும் ஒருவர். அவர் தன்னுடைய புவியியல் பாடத்தில் படித்ததைக் கொண்டு, சுனாமி ஏற்படுவதற்கு முன், கடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டிருக்கிறாள். ஏதோ அசம்பா விதம் ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்து தன்னுடன் வந்திருந்தவர்களை எச்சரித்தி ருக்கிறாள். அதனால் அந்த 100 சுற்றுலாப் பயணிகள் உயிர் பிழைத்திருக்கின்றனர்.

பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் கருவி களை இந்தியப் பெருங்கடல் பகுதியில் பொருத்தியிருந்தால், இந்தப் பேரழிவின் கோரத்தை குறைத்தி ருக்கலாமோ என்ற எண்ணம், அதன்பின்தான் எழுந்தது.

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அண்டை நாடுகள் தாராளமாக உதவிக் கரம் நீட்டு கின்றன. இது ஆரோக்கியமான செயல்தான். அதேசமயத்தில் பேரிடர் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தும் விஷயத்திலும் அண்டை நாடுகள் பெரிய மனதோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விஞ்ஞானிகள், அரசியல் தலை வர்கள், தன்னார்வ அமைப்பினர், பத்திரிகை, ஊடகவியலாளர்கள் எல்லாரும் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும்.

கடற்கரை ஓரங்களில் பொழுது போக்கு பூங்காக்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றை அமைப்ப தற்கு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது. அரசு இந்த விஷயத்தில் கவனமாக இருந்தால் பெருமளவு உயிர்ச் சேதத்தைத் தவிர்க்கலாம்.

உலகம் முழுவதும் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 2.5 லட்சம் கோடி) சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிக்காக வழங்கப் பட்டன. இதில் 10 சதவீதமாவது பேரிடர் கண்காணிப்புச் சாதனங்க ளைப் பொருத்துவதற்காக செல விடப்பட்டால், எதிர்காலத்தில் இத்தகைய பேரிடர்களைத் தவிர்க்க லாம்.

பேரிடர் செலவுகள், பேரிடர் மேலாண்மைக்கான நிதிகளை ஒவ்வொரு நாட்டு அரசும் அதன் ஆண்டு நிதிநிலை அறிக்கையி லேயே ஒதுக்க வேண்டும். அரசு அமைப்புகளையும் தன்னார்வ அமைப்புகளையும் இதற்கான பணிகளில் ஒருங்கே இடம்பெறச் செய்யவேண்டும்.
பேரிடர் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு குறித்தும் மக்கள் தொடர்புச் சாதனங்களின் வழியாக அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளி லேயே பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறித்த பாடங்களும், வகுப்புகளும் செய்முறைப் பயிற்சிகளும் இடம்பெறவேண்டும்.


தொடர்புடையவை



No comments:

Post a Comment