Friday 30 January 2015

பணிநிறைவு பாராட்டுவிழா 31.01.2015


திருவாரூர் அடியக்கமங்களம் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் M.தெட்சிணாமூர்த்தி TM அவர்கள் 36-வருட காலம் தொலை தொடர்பு இலாக்காவில் மிக செம்மையாக பணிபுரிந்துள்ளார்.31-01-2015 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெறும்.


அவர்கள் பணி ஓய்வு காலம் சிறக்க BSNLEU மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .  

ஒபாமாவின் வருகை- இந்தியர்களாகிய நமக்கு பெருமையான விஷயமே அல்ல...

டெலிகுருசேடர் பத்திரிக்கை செய்தியின் தமிழாக்கம்.<<<Click Here>>>

Thursday 29 January 2015

அலை அலையாய் திரள்வோம்.... கடலூருக்கு.

BSNLஐ பாதுகாக்க 30.01.2015 அன்று கடலூரில் நடைபெற உள்ள அனைத்து சங்க தமிழ் மாநில கருத்தரங்கிற்கு அனைவரும் வருக வருக என அன்புடன் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் அழைக்கிறது.<<<Click Here>>>

Tuesday 27 January 2015

கார்டூனிஸ்ட் R.K.லக்‌ஷ்மண் காலமானார்

இந்திய நாட்டின் பிரபல கார்டூனிஸ்ட் திரு R.K.லக்‌ஷ்மண் தனது 94 ஆவது வயதில் 26.01.2015 அன்று காலமானார்.<<<Click Here>>>

Saturday 24 January 2015

இந்தியாவின் 66-வது குடியரசு தினமாகும் 26.01.2015

அனைவருக்கும் இனிய 66-வது குடியரசு தின வாழ்த்துக்கள்

வந்தே மாதரம்....   வந்தே மாதரம்....

இந்திய குடியரசின் அடிப்படைக் கொள்ளைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும்   குடியரசு தின வாழ்த்துக்கள்....



தோழமையுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

Friday 23 January 2015

கண்ணைக் கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்

இரு மாநிலச் சங்கங்கள் கொடுத்த அறைகூவலை ஏற்று தமிழ் மாநிலம் முழுவதும் கண்ணைக் கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.<<<Click Here>>>

கண்ணைக் கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்.

இரு மாநிலச் சங்கங்கள் கொடுத்த அறைகூவலை ஏற்று தமிழ் மாநிலம் முழுவதும் கண்ணைக் கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சென்னையில் சம்பளம் உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.<<<Click Here>>>

தஞ்சையில் ஓப்பந்த ஊழியர்களுக்கான சம்பளம் பட்டுவாடா உடனே வழங்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 22.01.2015

தஞ்சையில் ஒப்பந்த ஊழியர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 22.01.2015 அன்று நடைபெற்றது.அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் மற்றும் நிறந்தர ஊழியர்களும் கலந்துகொண்டனர் BSNLEU தலைமையில் நடைபெற்றது.





திருவாரூரில் தோழர்கள்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது கீழே உள்ள படம்


தோழமையுடன்
தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம்

BSNL WWCC மாநிலக் குழுக் கூட்டம்

தமிழ் மாநில BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் கடலூரில் 30.01.2015 அன்று நடைபெற உள்ளது.<<<Click Here>>>

சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கம்

Sunday 18 January 2015

கடலூர் கருத்தரங்கம்

30.01.2015 அன்று கடலூரில் நடைபெற உள்ள கருத்தரங்கத்திற்கான சுவரொட்டி<<<Click Here>>>

Friday 16 January 2015

சுற்றறிக்கை எண்:16

சிம் கார்ட் பற்றாக்குறையை சரி செய்யக் கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:15

BSNLன் புதிய CMD ஆக திரு அனுபவ் ஸ்ரீவத்சவா - மற்றும் ஒரு சில மத்திய சங்க செய்திகள்<<<Click Here>>>

Tuesday 13 January 2015

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பழையவை கழிதலும் புதியன புகுதலும் போகி....
இனிய போகிப் பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்
பொங்கல் என்பது
சங்கத் தமிழனின் தேசியத் திருவிழா
வீசிய விதையின் வேரில் முளைத்த
வியர்வைப் பூக்களின்
இயற்கைத் திருவிழா

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
சேற்றில் வீடுகட்டி
செம்மண்ணில் நடைபயின்று
வரப்பு வீதிகளில்
கோவனத்தில் வாழ்ந்துவரும்
விவசாயித் திருநாள் இந்த உழவர் திருநாள்...

தோழமையுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

  

தேவையான சிம்கார்ட்களை உடனே வழங்கு- தமிழகம் முழுவதும் 13.01.2015ல் ஆர்ப்பாட்டம்.

தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு மேல் தமிழகத்தில் தேவையான சிம்கார்டுகள் இல்லாததை பல முறை சுட்டிக்காட்டியும், இன்று வரை சிம்கார்ட்கள் வழங்காத நிர்வாகத்தின் அலட்சிய போக்கினை கண்டித்து 13.01.2015 அனைத்து கிளை களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் அறை கூவல் விடுக்கின்றது. வெற்றிகரமாக்குவோம். BSNLஐ பாதுகாப்போம்.<<<Click Here>>>

Thursday 8 January 2015

பணி நிறைவு பாராட்டு விழா


தோழியர் சீத்தாலெட்சுமி அவர்கள் 1983-ஆண்டு பணியில் சேர்ந்து 03.01.2015 அன்று விருப்பப் ஒய்வில் சென்றார். அவர் பணியில் சேர்ந்து முதல் நமது சங்கத்தில் மட்டுமே உறுப்பினராக இருந்து பல்வேறு சங்க பொறுப்புகளிலும் இருந்துள்ளார். அவரது பணி ஒய்வு பாராட்டு விழா 08.01.2015, அன்று தஞ்சை பாலாஜி நகர் கம்யூனிட்டி ஹால் இனிதாக நடந்தது.அவருடன் பணி புரிந்த அனைவரும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.BSNLEU சார்பாக அவருக்கு சால்வை அணிந்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.மாவட்ட தலைவர் தோழர்.A.இருதயராஜ்,மாவட்ட செயளர்  தோழர்.D.சுப்ரமணியன்,தோழர்.மாணிக்கம் மற்றும் பலர் வாழ்த்துறை வழங்கினார்கள். தோழியர் சீத்தாலெட்சுமி அவர்கள் அவரது பணிகாலம் சிறக்க BSNLEU மவட்ட சங்கம் செஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

தோழியர் சீத்தாலெட்சுமி அவர்கள் பாராட்டு விழா படம்




















தோழமையுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

Tuesday 6 January 2015

தர்ணா

நன்றி...நன்றி...


நமது அகில இந்திய FORUM அறை கூவலை ஏற்று 06.01.2015 அன்று

நடைபெற்ற தர்ணா போராட்டத்தில்

தஞ்சை மாவட்டத்தில் பங்கேற்ற

அனைத்துதோழர்களுக்கும் மற்றும் தோழியர்களுக்கும் நமது

நெஞ்சார்ந்த நன்றியும்... பாராட்டும்... வாழ்த்துக்களும்...தெரிவித்துக்கொள்கிறோம்

நமது மாவட்டத்தில் 200  பேர்

தர்ணாபோராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்து

தோழர்களுக்கும்  தோழியர்களுக்கும் போராட்டக்குழுசார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.........




தோழமையுடன்
BSNLEU மாவட்ட சங்கம்
தஞ்சை



தர்ணா

அகில இந்திய Forum அறைகூவலை ஏற்று இன்று தமிழகம் முழுவதும் தர்ணா வெற்றிகரமாக நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் திரளாக தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னை CGM அலுவலகத்தில் அனைத்து சங்க மாநிலச் செயலர்கள், அகில இந்திய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் பல மாவட்டங்களில் கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து சில புகைப்படங்கள்<<<Click Here>>>

இரங்கல் செய்தி

"கண்ணீர் அஞ்சலி"

நமது பாபாநாசம் BSNLEU கிளைதலைவர் தோழர் L.இளஞ்செழியன் அவர்களின் தகப்பனார் திரு. லெட்சுமணன் முதலியார் அவர்கள் 06.01.2015 அன்று இயற்கையை எய்தினார். அவரது பிரிவால் வாடும்  அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம். - தஞ்சை BSNLEU மாவட்டச் சங்கம்

BSNL - ஊழியர்கள் - அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கையெழுத்து இயக்கமும் மற்றும் தர்ணா போராட்டமும் துவக்கம் 06.01.2014


BSNL - ஊழியர்கள் சங்கம்  மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு   "கையெழுத்து இயக்கம் தர்ணா" போராட்டமும் 06.01.2015 இன்று காலை 10.00 மணியளவில்  LIC ஊழியர் சங்கத்தின் தோழர்.ரா.புண்ணியமூர்த்தி அவர்கள் முன்னிலையில் தஞ்சை CTMX- அலுவலகத்தின் முன் எழுச்சியுடன் துவங்கப்பட்டுள்ளது.
























தோழமையுடன்
தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம்