Monday 15 January 2018

சோப்பு, டவல் - ரொக்கம் -சம்பளத்துடன் பட்டுவாடா

சோப்பு, டவல், டம்ளர்,பேணா, டைரி, வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களுக்கு பதில், "ரொக்கமாக" நம் முயற்சியால், ஆண்டிற்கு ரூ. 500  வழங்கப்பட்டு வந்தது. பல வருடமாக ஒரே தொகை வழங்கப்பட்டு வருவதால், கால மாற்றத்திற்கு ஏற்ப, தொகையை அதிகப்படுத்த, மாநில கவுன்சிலில் கோரிக்கை வைத்திருந்தோம். 

நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, 2017 ஆகஸ்டில் அதற்கான உத்தரவு வெளியாகியது. Group C & D இரு பிரிவிற்கும், ஒரே மாதிரி ரூ.750.00 வழங்க கோரிய நமது கோரிக்கையும் அதில் ஏற்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த மாத சம்பளத்துடன், ரூ. 750.00 வழங்கப்படும்

Wednesday 10 January 2018

நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


வருந்துகிறோம்!

தோழர். மனோஜ்  
ஒப்பந்தத் தொழிலாளி, கன்னியாகுமரி  

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு BSNL இணைப்பகத்தில் கேபிள் ஜாயிண்டராக கடந்த 23 வருடங்களாக பணியாற்றி வந்திருக்கிறார்.
கடந்த 3 மாதங்களாக சம்பளம் வராத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டு விட்டதாக செய்தி அறிகிறோம்.

மறைந்த தோழர் மனோஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு 

நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday 1 January 2018

தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம்


தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் (நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதம்முதல்) வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க கோரி தமிழகத்தில் BSNL ஊழியர் சங்கமும் தமிழ்நாடு தொலைதொடர்புஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து 22.12.2017 மாலை நேர தர்ணாவையும், 27.12.2017 மாலை முதல் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம்முன்பும் காத்திருப்பு போராட்டங்களையும் நடத்தின. 28.12.2017 அன்று மாநில தலைமை பொதுமேலாளர் அழைத்து மாநில நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகளை கூறி விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு இடையே நமது மாநில சங்கங்கள் சென்னையில் உள்ள Dy.CLC(C) அவர்களை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அப்போது அவரும் இதில் தலையிட்டு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் TNTCWU மாநில சங்கத்திடம் கலந்தாலோசித்து BSNLEU வின் மாநில செயலகம் கூடி இந்த போராட்டத்தை தற்போது விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 01.01.2018க்குள் ஊதியம் வழங்கப்படவில்லை எனில் 02.01.2018 முதல் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU ஆகிய சங்கங்களின் மாநில சங்க நிர்வாகிகள் சென்னை தமிழ் மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமை பொது மேலாளரை சந்தித்து இந்த முடிவுகளை தெரிவித்ததுடன் போராட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்த ஊழியர்கள் மீது தல மட்டங்களில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Wednesday 6 December 2017

Extended District Executive Committee Meeting of Thanjavur


No.BSNLEU/TNJ/2016-17/95                            dated  28.11.2017
Notice
It is hereby notified under article 15 of the Constitution of BSNL Employees Union, that the Extended District Executive Committee Meeting of Thanjavur District union will be held on  08.12.2017  FRIDAY  under the presidentship of Com. D.Subramanian, District President, BSNLEU, Thanjavur.  The venue of the District Executive Meeting is at BSNL Employees  District  Union Office, BSNL Complex, Balaji Nagar, Thanjavur and the meeting will begin at 10.00 hrs. The Agenda for the meeting is as follows:-
Agenda
1.   Central Executive meeting decision
2.    12.12.2017 & 13.12.2017 Two days Strike
3.    Submission of LCM agenda
4.    Contract Labour issues
5.    Any other items with the permission of chair

Com. S.Subramanian, Asst Circle Secretary, BSNLEU from Tirupur  will attend and inaugurate the Extended District Executive Committee meeting.
                                                                                             
                  

                                                                                                                                                                                                                                                                                                                                              [A.IRUDAYARAJ]
                             DIST SECRETARY

Copy to:
 1.   The General Manager, BSNL, Thanjavur. It is reqested to grant SCL to the Dist office
       bearers, Branch Secretaries  and to all attended  the  Extended DWC on 08/12/2017
       at Thanjavur.
 2.  Com. A. Babu  Radhakrishnan, Circle   Secretary,  BSNLEU, Chennai.
 3.  All the District Office Bearers &, Branch Secretaries of BSNLEU TNJ SSA.
      (It is requested to bring the pending local issues to take up in LCM).

 4.  Dist Secretary, TNTCWU, Thanjavur SSA. 

Saturday 25 November 2017

தஞ்சை மனித சங்கிலிப் போராட்டம்

23-11-17  மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற மனித சங்கிலியில்  BSNLEU---NFTE---SNEA---AIBSNLEA---FNTO---AIGETOA---SEWABSNL----TEPU---BEABSNL  சங்கங்களின் சார்பாக 400 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் பங்கேற்றனர்.  தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையம் வாயில் துவங்கி வினோதகன் மருத்துவமனை வரை சுமார் ஒரு கி.மீ தூரம் கைகோர்த்தனர்.  தஞ்சை, பாபநாசம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். போராட்டக் குழுவின் தலைவர் தோழர் பழனியப்பன் துவக்கிவைத்து உரையாற்றினார். இறுதியில் போராட்டக் குழுவின் கன்வீனர் தோழர். உதயன் அவர்கள்அடுத்தகட்டப் போராட்டத்தை விளக்கியும்  அதற்கு அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தார்,  BSNL ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர்.இருதயராஜ்  வந்திருந்த அனைவருக்கும்  நன்றியைக் கூறி போராட்டத்தை நிறைவு செய்தார்.

 



 

Wednesday 22 November 2017

மனிதச் சங்கிலிப் போராட்டம்

தஞ்சை நகரில் மாபெரும்  மனிதச் சங்கிலிப் போராட்டம்.
நாள்:  23-11-2017மாலை 4 மணி
இடம்:    தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையம் முதல்
=======================================

கோரிக்கைகள்:
1-1-2017 முதல் 3வது ஊதிய மாற்றத்தை  அமுல்படுத்து!
2வது  ஊதியக் குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண். 
BSNL ஐ நலிவடையச் செய்யும் 
துணை டவர் நிறுவனத்தை உருவாக்காதே!! 

அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Monday 20 November 2017

நமது தஞ்சை மாவட்டத்தில் வேலைநிறுத்த விளக்க கூட்டம்.


BSNLEU---NFTE---SNEA---AIBSNLEA---FNTO---AIGETOA---SEWABSNL---BSNLMS-----BSNLOA----BSNLATM----TEPU-----AIBSNLOA----BEABSNL
சங்கங்களின் சார்பாக 08-12-2017 மாலை 0530  மணிக்கு   தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடத்திட திட்டமிடபட்டுள்ளது. அனைத்து சங்க‌தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுகிறோம்.

Monday 6 November 2017

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி மாநாடு மதுரை பிரகடனம்

சாதி பாகுபாடு மற்றும் சாதிய ஒடுக்குமுறை ஆகிய கொடுமைகள் ஆண்டாண்டு காலமாக ஆளும் வர்க்கங்களால் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்படுகிற ஒரு போராகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய கொடூரமான கட்டமைப்பு நீடிப்பதற்கு ஆளும் வர்க்கங்கள் முழுமையான ஆதரவும் உதவியும் செய்து வருகின்றன. கடந்த காலங்களில் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக பெருமளவில் போராட்டங்கள் நடந்துள்ளன என்ற போதிலும், இன்றைக்கும் மனிதம் என்ற மாண்புக்கு எதிராக பெரும் அச்சுறுத்தலாக இந்தக் கொடுமைகள் நீடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அதற்கு எதிரான போராட்டங்கள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
சாதிய அமைப்பு முறையை வேரோடு ஒழிப்பதற்கான போராட்டத்தில், தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில், சாதியப் பாகுபாடு, சாதிய ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது; சமூக நீதிக்கான போராட்டத்தை கட்டவிழ்த்துவிடுவதில், அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய மிக முக்கியமான தருணமாக இது இருக்கிறது. மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்துத்துவா எனும் வரையறையோடு, சாதி ரீதியான சமூகத்தை முதன்மைப்படுத்துவது என்ற நோக்கத்துடன் கூடிய நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து உந்தித் தள்ளப்படுகிறது. இதன் மூலம் சமூகத்தை ஒரு முழுமையான சாதிய சமூகமாக சீரழிக்கும் நிலை உருவாக்கப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் தலைமையின் கீழ், இத்தகைய சாதி வெறி சக்திகளும், பிற்போக்குவாத சக்திகளும் ஊக்கம் பெற்று ஆட்டம் போடுகிற நிலை தீவிரமடைந்திருக்கிறது. மதவாத மற்றும் சாதிய தாக்குதல்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அன்றாட நிகழ்வுகளாக மாறியுள்ளன. சாதி அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளன; சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொள்பவர்கள் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு உள்ளாகிறார்கள். நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் பலவும் தலித் மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிற இடங்களாக மாறியுள்ளன. ஜனநாயக சூழல் என்பது அழிக்கப்பட்டு வருகிறது. பன்முக தன்மை வாய்ந்த கலாச்சார கூறுகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு வருகின்றன. கொடுமைகளை எதிர்த்து கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகளின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன.
இத்தகைய கொடுமைகள் நிகழும்போது, இதுபற்றிய முழுமையான உண்மைகளை வெளியிடவிடாமல், ஊடகங்கள் ஒடுக்கப்படுகின்றன. மக்களின் மனங்களை மதவெறிமயமாக்குகிறது. சாதி வெறிமயமாக்குகிற தங்களது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் விதத்தில் ஊடகங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. நவீன தாராளமயம் மற்றும் உலகமய சக்திகள் தங்களது சுரண்டலை மேலும் மேலும் தீவிரப்படுத்தவும், அதன் மூலம் லாபத்தை மேலும் மேலும் அதிகரிக்கவும் இத்தகைய சாதிவெறி-மதவெறி கட்டமைப்புகளோடு ஒத்துழைக்கவும் இணைந்து செல்லவுமே விரும்புகின்றன. பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசாங்கம், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்கள் பின்பற்றிய அதே பொருளாதாரக் கொள்கைகளையே இன்னும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது; அதோடு, பழைய நிலப்பிரபுத்துவ சாதிய கட்டமைப்பை மீண்டும் நிறுவுவதற்கு முழுமையான ஆதரவினை அளித்து வருகிறது.
இந்திய நாட்டின் மக்கள் நடத்திய மாபெரும் போராட்டங்களின் விளைவாக நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ள இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய அடித்தளங்கள் படிப்படியாக நொறுக்கப்பட்டு வருகின்றன. சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு கூடிக் குலாவிய- அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்த ஆர்எஸ்எஸ் - மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவின் வாரிசுகளான ஆர்எஸ்எஸ், அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இன்றைக்கு இந்த நாட்டை மதவெறி-சாதிவெறி பாதையில் கொண்டு செல்கிறார்கள். இத்தகைய சக்திகளை தோற்கடிப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு எழுந்து நிற்பதற்கான தருணம் இது. நாசகர சக்திகளை தோல்வியுறச் செய்து, நமது தேசத்தை சாதியும் வர்க்கமும் இல்லாத ஒரு சமூகமாக மாற்றுவதை நோக்கிய பாதையில், முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான தருணம் இது. அந்த லட்சியத்தை எட்டுவதற்கு நமது மக்களின் கரங்களில் ஒரு ஆயுதமாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்சுழலட்டும். தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் இரண்டாவது அகில இந்திய மாநாடு நாடு முழுவதும் உள்ள தலித் மக்களையும் இதர அனைத்துத் தரப்பு மக்களையும் சாதியற்ற - வர்க்கமற்ற நீதி மிகுந்த சமூகத்தை உருவாக்குவதற்கான போராட்டங்களில் அணி திரளுமாறு அறைகூவி அழைக்கிறது.
இலக்குகளை அடைவதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் அமைப்புகளும் ஒத்துழைப்பான முறையில் செயல்படுவோம் என இந்த மாநாடு உறுதியேற்கிறது. அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இந்த முழக்கங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களிலும் குரல் எழுப்ப வேண்டுமென்று மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகள் இந்த முழக்கங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறது. எதிர்வரும் பட்ஜெட் அமர்வுகளில் மேற்கண்ட கோரிக்கைகளை உரத்து ஒழிக்கும் விதத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றுபட்டு மிகப்பெரும் போராட்டங்களை நடத்தவும் மாநாடு அழைப்பு விடுக்கிறது. நீதிக்காக போராடுவோம் என்ற முழக்கத்துடன் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களும் ஒன்றுபட்டு கரம் கோர்ப்போம் என தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி மாநாடு பிரகடனம் செய்கிறது

Monday 16 October 2017

அனைத்து சங்கங்கள் சார்பாக 16.10.2017 அன்று நடந்த ஆர்ப்பாட்டம்.

01.01.2017 முதல் BSNLல் ஊதிய மாற்றத்தை அமல்படுத்தக் கோரியும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்திடவும் BSNLல் உள்ள அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் சார்பாக 16.10.2017 அன்று தஞ்சை மாரீஸ் கார்னர்  தொலைபேசியகத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்.

Monday 9 October 2017

ஒப்பந்த ஊழியர் போனஸ் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூபாய் 7000- போனஸ்சாக வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக ரூபாய்.3750- மட்டும் கொடுத்த ஒப்பந்தகாரரை மீத தொகையை வழங்க வற்புறுத்தியும், அதை பெற்று தரும்படி நிர்வாகத்தை வலியுறுத்தியும் 09-10-2017 மாலை தஞ்சை மாரீஸ் கார்னர்  தொலைபேசியகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஓன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம்

=மாவட்டச் செயலாளர், BSNLEU,  TNTCWU  தஞ்சாவூர் மாவட்டம்

Saturday 7 October 2017

தோழமையுடன் வரவேற்கிறோம்!!

சொந்த வேலை நிமித்தம் காரணமாக தமது 3 மாத கால வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பும் நமது மாநில தலைவர் தோழர் .எஸ்.செல்லப்பா அவர்களை தோழமையுடன் வரவேற்கிறோம்!!

BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

அனைத்து BSNL ஊழியர் சங்கங்கள்/கூட்டமைப்புகளின் முடிவுகள் விபரம்

1)இனி அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் /கூட்டமைப்புகள் ALL UNIONS and ASSOCIATIONS OF BSNL” என்ற பதாகையின் கீழ்செயல்பட்டு,பொதுப்பிரச்சனைகளான சம்பள உடன்பாடு , துணைடவர் நிறுவனம் அமைவதை தடுப்பது போன்ற பிரச்சனைகளுக்காக போராடும்.
2)அனைத்து பொதுச்செயலர்கள் விரைவில் நிர்வாகத்திற்கு போராட்ட அறைகூவலை ஒன்றுபட்டு வெளியிடுவார்கள்.
3)கீழ்க்கண்ட பிரச்சனைகள் உடனடி தீர்வுக்காக போராட்ட கோரிக்கையாக கண்டறியப்பட்டுள்ளன.
 01-01-2017 முதல் சம்பள மாற்றம் மற்றும் 2 வது ஊதிய உடன்பாட்டில் தீர்க்கபடாமல் உள்ள நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள்,  துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்துவது
4) கீழ்க்கண்ட போராட்ட திட்டங்கள் முடிவெடுக்கப்பட்டுள்ளன.
அ)16-10-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம்
ஆ)16-11-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு மனிதசங்கிலி  இயக்கம்
இ)15-11-2017 அன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்தல்
ஈ)12 & 13-12-2017 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம்.
உ)காலவரையற்ற வேலை நிறுத்தம்- தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
5) அடுத்த கூட்டம் 23-10-2017 அன்று நடைபெறும்.

 போராட்ட ஆதரவு   கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Tuesday 26 September 2017

ஒப்பந்த ஊழியர் பிரச்சனை மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை

BSNLEU & TNTCWU
THANJAVUR SSA
---------------------------------------------------------------------------------      
          A.Irudayaraj,                                         J.Ramesh,
                    District Secretary(BSNLEU),                District President(TNTCWU),
             Cell: 7598775811                                  Cell: 948610687
           ------------------------------------------------------------------
To
The Principal General Manager,
BSNL.,
Thanjavur-613007

No.BSNLEU & TNTCW/TNJ/2016-17/   dated  at Thanjavur the 19.09.2017
Sir,
            Sub: Request to settle the Contract workers problems- reg

The following contract workers problems are brought to the notice of our union for settlement.

1. The amount deducted as EPF by the Online consultancy, Bangalore during the period from 01/06/2007 to 31/12/2008 neither remitted to EPF account nor refunded till date.  It was informed that a sum of Rs.12 lakhs was withheld from the security deposit of the contractor for the settlement, but not settled. The matter may please be verified and necessary action may be taken to refund the amount to the concerned contract workers.

2.  It is verified from the EPF office that the amount deducted as EPF by the Shree security agency  during the period from 01/11/2015  to 30/09/2016 for 20 workers mostly from Area 1 not included in EPF account.  Kindly arrange to reconcile,  otherwise for refund.

3. The remittance details of EPF contribution not communicated to the workers by the Balaji agency, Tiruchy for the past one year.

4. Every month a sum of Rs.10- were deducted from the salary of the workers by the Balaji agency, Tiruchy for the past one year. It may be avoided.

5. Our circle union has given a call for agitation in front of CGM office, Chennai as hunger fast from 12.09.2017 to 15.09.2017 to settle the grievances of contract workers, and it was deferred towards the assurance given by Circle Administration to pay the wages before 7th of every month also bonus by the contractor.  Therefore it is requested to ensure the minimum bonus of Rs.7000- to all the contract workers in our SSA.

6. As per Circle office guidelines, the Skilled/Semi-Skilled/Unskilled wages are implemented at many SSAs including Kumbakonam, but so far in our SSA it is not done. Therefore kindly look in to the matter to implement atleast from this month with the consultation with  service unions.

Thanking You
Yours faithfully
                                                                                                                                                                                                                                                                              (A.Irudayaraj)

                                                                                                         DIST SECRETARY