Saturday 27 May 2017

அரசு ஊழியர்களும் பணிநீக்கம்.. மத்திய அரசின் திடீர் நடவடிக்கை..!

இந்திய ஐடி நிறுவனங்களின் அறிவிக்கப்பட்டுள்ள பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்துள்ள நிலையில், அரசு பணியிடங்களில்  ஒரு வேலையும் செய்யாத 129 அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வை அளித்து அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் உறுதிப்படுத்தினார்.


இந்த அறிவிப்பை வெளியிடும் முன் மத்திய அரசு குரூப் ஏ பிரிவில் 24,000 ஊழியர்களையும், குரூப் பி பிரிவில் 42,251 ஊழியர்களின் செயல்திறனை ஆய்வு செய்து அதன் பின்னரே 129 ஊழியர்களை வேலையை விட்டுத் துரத்தியுள்ளது.

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

ஊதியதிருத்தம் பெறுவதற்கு கடுமையான போராட்டத்திற்கு தயாராவோம்

3வ்து ஊதியகுழுவிற்கு DPE அளித்துள்ள பரிந்துரையில் AFFORDABILITY CLAUSE ஐ நீக்கவேண்டும். காரணம் அதில் பொதுதுறை நிறுவனங்கள் தங்களூடைய வரிககு முந்தைய லாபத்தில் ஊதியதிருத்ததிற்காக 20 சதவீதம் செலவு செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ள்து அதன்படி BSNL ல் கடந்த மூன்று வருடங்களில் லாபம் இல்லை.  DOT யின் முன்னாள் செயலர்  திரு J.S.DEEPAK  நமக்கு ஆதரவாக இருந்தார் த்ற்போது அவர் பணி ஓய்வு சென்றபின் நிலை மாறியுள்ளது, ஆகவே  அனைத்து சங்கங்களூம் ஒன்றினைந்து ஒரு கடுமையான போராட்டம் நடத்தினால்தான் நாம் பெறமுடியும் அதற்கு தயாராவோம்.

நமது பொதுசெயலர் தோழர்.அபிமன்யூ அவர்கள் CMD யை சந்தித்து DOT யின் தற்போதைய நிலை சம்மந்தமாக விவாதித்தார். பாரதபிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு 26.05.2017 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Monday 22 May 2017

புதிய மாநில நிர்வாகிகள்

ஈரோட்டில் 19-20 தேதிகளில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
மாநில தலைவர் :
தோழர்  S.செல்லப்பா, OS
சென்னை
மாநில துணை தலைவர்கள்:  
1)      தோழர்  Kமாரிமுத்து, TT
கோவை
2)      தோழர்  T.பிரேமா, TT
சென்னை
3)     தோழர் S.தமிழ்மணி, OS
திருச்செங்கோடு
4)     தோழர் P.சந்திரசேகரன். TT
போடி
5)     தோழர் K.V.சிவக்குமரன், SA
சென்னை

மாநில செயலர் :

தோழர் A.பாபுராதாகிருஷ்ணன்,

சென்னை
மாநில உதவிச்செயலர்கள்:
1)     தோழர் M.முருகையா, JE
சென்னை
2)     தோழர் S.சுப்பிரமணியன், OS
திருப்பூர்
3)     தோழர் P.இந்திரா, OS
நாகர்கோவில்
4)    தோழர் R.மெய்யப்பன்கிறிஸ்டோபர்,
திருச்செந்தூர்
5)     தோழர் M.பாபு, TT
தர்மபுரி

மாநில பொருளாளர் :

தோழர்K.சீனிவாசன்,TT

சென்னை
மாநில உதவிபொருளாளர்:
1)     தோழர் G.சுந்தர்ராஜன்,  JE
திருச்சி

மாநில அமைப்புச்செயலர்கள்:

1)     தோழர் V.மணியன், TT

ஈரோடு
2)     தோழர் K.பழனிக்குமார், OS
பழனி
3)     தோழர் A.சமுத்திரகனி, TT
சிவகாசி
4)     தோழர் P.ரிச்சர்ட், JE
மதுரை
5)     தோழர் N.P.ராஜேந்திரன், SOA
கோவை
6)     தோழர் N.சக்திவேல், TT
உடுமலை
7)    தோழர் V.சீதாலட்சுமி, OS
திருநெல்வேலி

தோழர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Tuesday 16 May 2017

போக்கு வரத்து தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்

15.05.2017 அன்று போராடதுவங்கியுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்  தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.


போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக 
போக்குவரத்து  தொழிலாளர்களுக்கு ஆதரவாக
 தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் 
17-05-2017  அனைத்து சங்கங்கள் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Thursday 11 May 2017

தமிழ் மாநில மாநாட்டு பிரதிநிதிகளுக்கு சிறப்பு விடுப்பு

2017, மே 19 மற்றும் 20 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற உள்ள 8வது தமிழ் மாநில மாநாட்டிற்கு வர உள்ள சார்பாளர்களுக்கு சிறப்பு தற்காலிக விடுப்பு அளித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவின் நகல் BSNLEUTNC.Com

Monday 1 May 2017

131வது மேதின வாழ்த்துக்கள்

மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
மே 3, 1886 அன்று மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலைஎன அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டதுநாம் தற்போது கொண்டாடும் மே தினம், தொழிலாளிகள் விடுமுறை தினமாக, ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, அமெரிக்காவில் தொழிலார்கள், எட்டு மணி நேர வேலைதான் வேண்டும் என்று போராட்டம், Haymarket என்ற இடத்தில் நடத்தியதன் நினை வாகத்தான். இந்தப் போரட்டம் Knights of Labour என்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ் மே 1ஆம் தேதியைத் தொழிலாளிகளின் விடுமுறை நாளாக, ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் (in commemoration of the Haymarket Martyrs) International Working Men's Association (the First International) அறிவித்தது. தொழிலாளிகள் சிந்திய இரத்தத்தின் ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியைச் சின்னமாக்கினர்
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்.