Thursday 6 February 2014

மதவெறி, ஊழல், விலைவாசி உயர்வுக்கு எதிராக திருச்சி, கரூரில் சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்





திருச்சிராப்பள்ளி, பிப். 5 -
மக்கள் நலனுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமுன்னிறுத்தும் கொள்கை களை விளக்கியும், பாஜக-வின் மதவெறி, காங்கிரஸின் ஊழல்முறைகேடுகளைக் கண்டித் தும் நாடு தழுவிய பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.அதனொரு பகுதியாக திருச்சியில் தென்னூர் அரசு மருத்துவமனை, சீனிவாச நகர், உய்யக்கொண்டான் திருமலை ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தென்னூர் பிரச்சார இயக்கத்திற்கு பகுதிச் செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். ‘பெல்’ சிஐடியு சங்கபொதுச்செயலாளர் ஆரோக் கியசாமி உரையாற்றினார். அரசு மருத்துவமனை அருகில்மாவட்டக்குழு உறுப்பினர் அன்வர் உசேன் சிறப்புரையாற்றினார். சீனிவாச நகர் பகுதியில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மண்டல இணைச்செயலாளர் ராஜமகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
இன்சூரன்ஸ் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜோன்ஸ், பன்னீர்செல்வம், பழனி, போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி சண்முகம், கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர்கள் தனலட்சுமி, எம்.எஸ்.கே.சக்தி, கிளைச்செயலாளர் அறிவுக்கரசி, வடிவேல், இருதயராஜ், ஆறுமுகம், வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் :
கரூர் பேருந்து நிலையம், தாந்தோணிமலை, ராய னூர், லைட் ஹவுஸ் கார்னர்ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.வேலுசாமி, எஸ்.பி.ஜீவானந்தம், வி.சரவணன், ஆ.முருகேசன், எம்.தண்டபாணி மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் ஹோசிமின், முருகன், கணேஷ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண் டனர்.

No comments:

Post a Comment